ஆராய்ந்து
அறியும்
ஆராய்ந்து பாரும் என் இயேசுவே
என்னை ஆராய்ந்து பாருமேன்
சோதித்து அறியும் என் இயேசுவே
என்னை சோதித்து பாருமேன்
ஆராய்ந்து பாரும் சீர்தூக்கி பாரும்
நித்திய வழியில் நடத்தும் - என்னை
என் வழிகளும் நினைவுகளும்
என்றும் உமக்கு முன் இருக்கின்றதே
என் இருதய சிந்தைகளை
முற்றும் முழுவதும் அறிந்தவரே - ஆராய்ந்து
என் கண்களும் காட்சிகளும்
என்றும் உமக்கு முன் இருக்கின்றதே
என் ஆசைகள் இச்சைகளை
முற்றும் முழுதும் அறிந்தவரே - ஆராய்ந்து
என் கரங்களும்; கிரியைகளும்
என்றும் உமக்கு முன் இருக்கின்றதே
என் கால்களின் பாதைகளை
முற்றும் முழுதும் அறிந்தவரே - ஆராய்ந்து
என் நாவும் வார்த்தைகளும்
என்றும் உமக்கு முன் இருக்கின்றதே
என் செவி கேட்கும் ஓசைகளை
முற்றும் முழுதும் அறிந்தவரே - ஆராய்ந்து