ஆராய்ந்து அறியும்

 

 

ஆராய்ந்து பாரும் என் இயேசுவே

என்னை ஆராய்ந்து பாருமேன்

சோதித்து அறியும் என் இயேசுவே

என்னை சோதித்து பாருமேன்  

 

     ஆராய்ந்து பாரும் சீர்தூக்கி பாரும்

     நித்திய வழியில் நடத்தும் - என்னை

 

என் வழிகளும் நினைவுகளும்

என்றும் உமக்கு முன் இருக்கின்றதே

என் இருதய சிந்தைகளை

முற்றும் முழுவதும்  அறிந்தவரே - ஆராய்ந்து

 

என் கண்களும் காட்சிகளும்

என்றும் உமக்கு முன் இருக்கின்றதே

என் ஆசைகள் இச்சைகளை

முற்றும் முழுதும் அறிந்தவரே - ஆராய்ந்து

 

என் கரங்களும்; கிரியைகளும்

என்றும் உமக்கு முன் இருக்கின்றதே

என் கால்களின் பாதைகளை

முற்றும் முழுதும் அறிந்தவரே - ஆராய்ந்து

 

என் நாவும் வார்த்தைகளும்

என்றும் உமக்கு முன் இருக்கின்றதே

என் செவி கேட்கும் ஓசைகளை

முற்றும் முழுதும் அறிந்தவரே - ஆராய்ந்து